வெந்தய மசாலா சாதம்

⋇ #வெந்தய #மசாலா #சாதம்

தேவையானவை:
 அரிசி - 300 கிராம்
 வெந்தயம் - 2 டீஸ்பூன்
 கீறிய பச்சை மிளகாய் - 2
 நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
 மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 3
 பூண்டு - 10 பல்
 சின்ன வெங்காயம் - 15
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 தேங்காய் - ஒரு மூடி
 சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:
அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும், சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும்.

இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும். பிறகு ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment