கற்பூரவல்லி என்ற ஓமவல்லி இலையின் மகத்துவம் !
கற்பூரவல்லி தாவரம், இருமல், சளி, போன்ற நோய்களுக்கு மிக முக்கிய மருந்தாக பயன்படுகிறது.
கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து, இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
இது வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் பயன்படுகிறது.
கற்பூரவல்லி இலை சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கி சூடு தணியும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காய்ச்சல் போகும்.
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் கூட தீரும்.
உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் கற்பூரவல்லி தாவரம் நரம்புகளுக்குச் சத்து மருந்தாகவும், மனக் கோளாறுகளைச் சரி செய்யும் மருந்தாகவும் பயன்படுகிறது.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் இந்த இலை பரிந்துரைக்கப்படுகிறது.
கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு, இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்ததும் இறக்கி விடுங்கள். சக்கையை எடுத்துவிட்டு. அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதேபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்.
கற்பூரவல்லி பஜ்ஜி
கற்பூரவல்லி இலைகளை சாறு வெளியேறாமல் நன்றாக கழுவி எடுத்து கொண்டு, உருளைக்கிழங்கு, வாழைக்காய்க்கு பதிலாக பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி போட்டு எடுக்க சூடான சுவையான ஆரோக்கியமான பஜ்ஜி கிடைக்கும்.
கற்பூரவல்லி தாவரம், இருமல், சளி, போன்ற நோய்களுக்கு மிக முக்கிய மருந்தாக பயன்படுகிறது.
கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து, இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
இது வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் பயன்படுகிறது.
கற்பூரவல்லி இலை சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கி சூடு தணியும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காய்ச்சல் போகும்.
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் கூட தீரும்.
உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் கற்பூரவல்லி தாவரம் நரம்புகளுக்குச் சத்து மருந்தாகவும், மனக் கோளாறுகளைச் சரி செய்யும் மருந்தாகவும் பயன்படுகிறது.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் இந்த இலை பரிந்துரைக்கப்படுகிறது.
கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு, இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்ததும் இறக்கி விடுங்கள். சக்கையை எடுத்துவிட்டு. அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதேபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் உடனடியாக கட்டுப்படுத்தப்படும்.
கற்பூரவல்லி பஜ்ஜி
கற்பூரவல்லி இலைகளை சாறு வெளியேறாமல் நன்றாக கழுவி எடுத்து கொண்டு, உருளைக்கிழங்கு, வாழைக்காய்க்கு பதிலாக பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி போட்டு எடுக்க சூடான சுவையான ஆரோக்கியமான பஜ்ஜி கிடைக்கும்.
No comments:
Post a Comment